தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சர்வதேச கமிட்டி ஒப்புதல் ஒலிம்பிக் போட்டிகளில் மீண்டும் குத்துச் சண்டை: 2028 லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கும்

லாஸ் ஏஞ்சல்ஸ்: வரும் 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச் சண்டை போட்டி மீண்டும் சேர்க்கப்பட உள்ளது. குத்துச் சண்டை போட்டியின் நிர்வாகம், அதன் நிதி மேலாண்மை, குத்துச் சண்டை போட்டிகளின்போது குத்துகளுக்கு பாயின்ட் தருவது, வெற்றி தோல்வி முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் காரணமாக, கடந்த 2019ல், சர்வதேச குத்துச் சண்டை சங்கத்துக்கு (ஐபிஏ), சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) தடை விதித்தது. அதைத் தொடர்ந்து, 2023ம் ஆண்டு, ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து குத்துச் சண்டை போட்டி நீக்கப்பட்டது.
Advertisement

அதன் பின், ஒலிம்பிக்கில் குத்துச் சண்டை போட்டியை மீண்டும் சேர்ப்பதற்காக பல்வேறு தரப்பினர் முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், வரும் 2028ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச் சண்டை போட்டியை சேர்க்க, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக அதன் தலைவர் தாமஸ் பேக் தெரிவித்துள்ளார். இந்த முடிவுக்கு, ஐஓசியின் 100 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு உறுதிப்படுத்த வேண்டும் என்றும், அந்த நடவடிக்கை சம்பிரதாயமான ஒன்று என்றும் அவர் கூறினார்.

Advertisement