தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சர்வதேச செஸ் போட்டி தீ விபத்தால் தள்ளிவைப்பு: முதல் போட்டி இன்று நடக்கும்

சென்னை: சென்னையில் முதல் சர்வதேச போட்டியான 3வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியையும், 2வது சென்னை சேலஞ்சர்ஸ் செஸ் போட்டியையும் நேற்று முதல் 15ம் தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர். மாஸ்டர்ஸ் பிரிவில் வெளிநாட்டு வீரர்கள் உட்பட 10 பேரும், சேலஞ்சர்ஸ் பிரிவில் 2 வீராங்கனைகள் உட்பட 10 இந்தியர்களும் பங்கேற்கின்றனர். இந்த 2 போட்டிகளிலும் முதல் நாளில் யார், யாருடன் மோதப் போகிறர்கள் எனபதற்கான குலுக்கலும், ஆட்டக்காரர்கள் அறிமுகமும் நேற்று முன்தினம் மாலை நடந்தது.

போட்டிகள் சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடத்தப்படுகிறது. முதல் சுற்று ஆட்டங்கள் நேற்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் போட்டி தொடங்க இருந்த விடுதியின் ஒரு பகுதியில் நேற்று, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தினால் வீரர்கள் உட்பட யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செஸ் ஆட்டக்காரர்கள் உடனடியாக வேறு விடுதிக்கு மாற்றப்பட்டனர். இது குறித்து போட்டி நிர்வாகத்தினர் கூறுகையில், ‘விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக புதன் கிழமை தொடங்குவதாக இருந்த முதல் சுற்று ஆட்டங்கள் வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்படுகின்றன’ என்றனர்.

Related News