தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ.9 லட்சம் 23 ஆண்டுக்கு பிறகு விதவைக்கு இழப்பீடு வழங்கியது ரயில்வே

புதுடெல்லி: பீகாரின் பின்தங்கிய கிராமத்தை சேர்ந்தவர் சன்யுக்தா தேவி. இவரது கணவர் விஜய் சிங் கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 21ல் பாட்னா செல்வதற்காக பக்தியார்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுத்துள்ளார். ரயில் புறப்பட்ட சமயத்தில் கடும் கூட்ட நெரிசலால் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த விஜய் சிங் பரிதாபமாக இறந்தார். இதனால் தேவி இழப்பீடு கேட்டு ரயில்வே தீர்ப்பாயத்தை அணுகினார். ஆனால் விஜய் சிங் மனநலம் சரியில்லாதவர் எனக் கூறி தேவி 20 ஆண்டாக அலைக்கழிக்கப்பட்டார். தீர்ப்பாயத்திலும் பாட்னா உயர் நீதிமன்றத்திலும் அவருக்கு நீதி கிடைக்கவில்லை.

Advertisement

2023ல் உச்ச நீதிமன்றத்தை நாடினார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மனநலம் சரியில்லாத நபர் எப்படி முறையாக டிக்கெட் வாங்கி பயணிப்பார் என கேள்வி கேட்டு, தேவிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க 2023 பிப்ரவரி 2ம் தேதி உத்தரவிட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக தேவியின் வழக்கறிஞர் காலமானதால் இந்த நீதிமன்ற உத்தரவு தேவிக்கு தெரியாமல் போனது. அவர் வேறு முகவரிக்கு வீடு மாறியதால், இழப்பீடு தர ரயில்வே நிர்வாகம் பல முறை கடிதம் அனுப்பியும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

இறுதியில், 23 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில்வேயின் தொடர் முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. தேவியின் வங்கி கணக்குக்கு வட்டியுடன் இழப்பீடு தொகை ரூ.8 லட்சத்து 92 ஆயிரத்து 953 கடந்த மாதம் 13ம் தேதி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தலைமை நீதிபதி சூர்யகாந்த், ஜாய்மால்யா பாக்சி அமர்வில் ரயில்வே நேற்று தெரிவித்தது. ‘‘ஏழையின் முகத்தில் சிரிப்பை காண்பதுதான் நாங்கள் சம்பாதிக்க விரும்புவது’’ என தலைமை நீதிபதி உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.

Advertisement

Related News