தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.10 லட்சம் வரை 4% வட்டியில் பெறலாம் மாணவர் கிரெடிட் கார்டில் 1 லட்சம் பேருக்கு கடன்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பெருமிதம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மாணவர் கடன் அட்டை திட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் மம்தா கூறினார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு, மாணவர்கள் எந்தவித நிதி நெருக்கடியும் இல்லாமல் கல்வியைத் தொடர உதவும் வகையில் மாணவர் கடன் அட்டைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisement

பொறியியல், மருத்துவம், சட்டம், ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பயிற்சி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் கடனைப் பெறலாம். கூட்டுறவு வங்கிகள், பொதுதுறை வங்கிகளிடமிருந்து ஆண்டுக்கு 4% எளிய வட்டியில் அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை கடனைப் பெறலாம் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் மம்தா பானர்ஜி எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில், உயர் கல்வியை ஆதரிப்பதை நோக்கமாக கொண்டு மாணவர் கடன் அட்டை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ.10 லட்சம் வரை கடன்களை பெற முடியும். மாநிலத்தில் கடன் அட்டை திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட கடன்களின் எண்ணிக்கை இன்று(நேற்று) ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையை தாண்டி சாதனை படைத்துள்ளது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News