தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்தணியில் பலத்த மழை: சாலையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி தீவிரம்

Advertisement

திருத்தணி: திருத்தணியில் பெய்த மழையால் மபொசி சாலையில் தேங்கியுள்ள நீரை பொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை சூறைக்காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் இங்குள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. திருத்தணி ரயில் நிலையம், மார்க்கெட் பகுதியில் உள்ள மபொசி சாலையில் முழங்கால் அளவுக்கு மழைநீருடன் கழிவுநீர் தேங்கியது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், காந்தி ரோடு வழியாக கடும் அவதியுடன் வாகன ஓட்டிகள் சென்றனர்.

தகவலறிந்து திருத்தணி நகரமன்ற தலைவர் சரஸ்வதி பூபதி உத்தரவின்பேரில், இன்று காலை நகராட்சி ஆணையர் அருள் மேற்பார்வையில் ஊழியர்கள், மபொசி சாலையில் தேங்கியிருந்த மழைநீரை பொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். அங்குள்ள தற்காலிக கால்வாயில் தேங்கிய மண் அகற்றப்பட்டு, அதன் வழியே மழைநீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது. இதேபோல் சுற்றுவட்டார சாலைகளில் தேங்கிய மழைநீரும் அகற்றப்பட்டன. இதனால் மபொசி சாலையில் வாகன போக்குவரத்து சகஜநிலைக்கு திரும்பியது.

Advertisement

Related News