தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு மேலாண்மை குழு பயிற்சி

ஊட்டி : பள்ளி கல்வி சார்பில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி நடந்தது. நீலகிரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாநில திட்ட அலுவலகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 88 பள்ளிகளை சார்ந்த தொடக்க நிலை, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பள்ளி மேலாண்மை குழு சார்ந்த ஒரு நாள் பயிற்சி ஊட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடந்தது.

Advertisement

பயிற்யை முதன்மை கல்வி அலுவலர் திருநாவுக்கரசு தலைமை வகித்து பயிற்சி முகாமினை துவக்கி வைத்தார். மாநில கருத்தாளர்கள் மரிய சூசை மற்றும் கார்த்தியாயினி பங்கேற்று பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியானது தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் விதமாகவும் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் நடத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

மேலும் பெற்றோருக்கான செயலியை பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிமுகம் செய்யவும் மேலும் பள்ளி மற்றும் பெற்றோர்களால் பள்ளிக்கு தேவைப்படும் உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து பெற்றோர் செயலியின் மூலம் உள்ளீடு செய்து அவை மாதம் தோறும் நடைபெறும் மாவட்ட கலெக்டர் தலைமையிலான பள்ளி கல்வி துறையின் கூட்டத்தில் தீர்வு காணபடுகிறது என தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட கல்வி அலுவலர் நந்தகுமார், கல்வியல் கல்லூரியின் தாளாளர் நோயல் ஸ்டீபன், உதவி திட்ட அலுவலர் அர்ஜூனன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் மற்றும் ஊட்டி வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள், அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.

Advertisement

Related News