தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கங்கைகொண்டசோழபுரத்திற்கு பிரதமர் மோடியின் வருகையில் மக்கள் பிரதிநிதிகளுக்கு அவமதிப்பு: ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டு

Advertisement

திருச்சி: பிரதமர் வருகையின்போது மக்கள் பிரதிநிதிகளுக்கு அவமதிப்பு நடந்ததாக ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் தனது சமூக வலைத்தளத்தில் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது: அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில் நடைபெற்ற மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். பிரதமர் பேசும்போது தன் (பாஜ) கட்சியை சார்ந்தவர்கள் பெயரை மட்டுமே கூறிவிட்டு, மாநில அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சா.சி.சிவசங்கர் ஆகியோர் பெயரை உச்சரிக்கவில்லை. இந்த தொகுதியின் எம்எல்ஏவான எனது பெயர் அழைப்பிதழிலிலும், செய்தித்தாள் விளம்பரங்களிலும் இடம்பெறவில்லை. மாறாக பா.ஜ. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பெயர் இடம்பெற்றிருந்தது.

ஒன்றிய அரசின் அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள 2 எம்எல்ஏக்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கவில்லை. மாநில அரசின் சார்பில் எனக்கு காலை 8.30 மணியளவில் தான் அழைப்பிதழ் கொடுத்தார்கள். கார் பாசும் வரவில்லை. மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதால், காலையில் வட்ட அளவிலான அலுவலர் வந்து அழைப்பிதழ் கொடுத்தார். அவர் நீங்கள் எம்.எல்.ஏ என்றெல்லாம் கொடுக்கவில்லை. கலெக்டரிடம் கூறி வருத்தப்பட்டதால் கொடுக்க சொன்னார்கள் என்று கூறினார். பின்னர் மாவட்ட ஆட்சியரின் தயவால் வேறு ஒரு மாவட்ட அதிகாரியின் கார் பாஸை எனக்கு 10.30 மணியளவில் அனுப்பி வைத்தார். அதன்பின்னரே விழா நிகழ்விடத்திற்கு சென்றேன். அங்கு நான் உட்கார வைக்கப்பட்ட இடம் ஏழாவது வரிசை. அரியலூர் எம்எல்ஏ சின்னப்பாவுக்கு எட்டாவது வரிசை.

எங்களுக்கு முன்பாக இருந்தவர்கள் இந்த மாவட்டம், தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள். பா.ஜ. வின் மாநில நிர்வாகிகள், ஆதரவாளர்கள், கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள். திமுக சார்பில் ஒருவரும் அழைக்கப்படவில்லை. 2016-ல் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற போது, இப்போதைய முதல்வர் பின்வரிசையில் பத்தோடு பனினொன்றாக அமர வைக்கப்பட்டார். அதுபோல் தான் இப்போது 2 எம்.எல்.ஏ -க்களுக்கும் நடந்தது. அவமரியாதை செய்வதில் அதிமுகவிற்கு சளைத்தவர்கள் இல்லை பா.ஜ. என்று நிரூபித்துள்ளார்கள். இது ஒன்றிய அரசின் அரசு விழாவா அல்லது பாஜ-வின் கூட்டணி கட்சி விழாவா என்ற கேள்வியே மனதில் எழுகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement

Related News