தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர் : அயனாவரத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

பெரம்பூர் : ஓய்வுபெறும் நாளில் சப்-இன்பெக்டருக்கு சல்யூட் அடித்த அயனாவரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனது ஜீப்பில் வழியனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் பணி ஓய்வுபெறும் நாளில் மாலை மரியாதையுடன் சக காவல்துறையினர் சார்பில் வழியனுப்பி வைப்பது வழக்கம். சில காவல் நிலையங்களில் இது சம்பிரதாயமாக கடைபிடிக்கப்படுகிறது.
Advertisement

சில காவல் நிலையங்களில் இதனை பெரிதுபடுத்த மாட்டார்கள்.

உயர் அதிகாரிகள் ஓய்வுபெறும் போது பெரிய மைதானங்களில் விழா வைத்து அவர்களுக்கு பணி நிறைவு உபசரிப்பு நடத்தி வழியனுப்பி வைக்கப்படுவார்கள். ஆனால் சாதாரண காவலர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள பணிநிறைவு பெறும்போது விழாக்கள் பெரிய அளவில் நடைபெறாது.

பணிஓய்வு பெறும் காவலரின் குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு வந்து காவலர்களை மாலை அணிவித்து அவர்களை கௌரவப்படுத்தி அனுப்பி வைப்பது ஒரு சம்பிரதாயமாக இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் அயனாவரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ஓய்வுபெறும் நாளில் அவருக்கு அயனாவரம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட மரியாதை அவரது கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைத்தது.

அயனாவரம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் முருகன்(60). இவர் கடந்த 40 ஆண்டுகளாக காவல்துறையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் 60 வயது எட்டியதால் ஓய்வு பெற்றார்.

இதனை முன்னிட்டு அயனாவரம் காவல் நிலைய போலீசார் சார்பில் அயனாவரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவருக்கு பிரிவு உபசார விழா நடத்தினர். அதனைத்தொடர்ந்து காவல் நிலையத்திற்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் முருகனுக்கு, அயனாவரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பரணிநாதன் சல்யூட் அடித்து தனது வாகனத்தில் முன்பக்க இருக்கையில் அமர வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

பதிலுக்கு சப் இன்ஸ்பெக்டர் முருகனும் நெகிழ்ச்சியுடன் இன்ஸ்பெக்டருக்கு சல்யூட் அடித்து விடை பெற்றார். காவல் துறையில் கடந்த 40 ஆண்டுகளாக நல்ல முறையில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் முருகனுக்கு அயனாவரம் போலீசார் கொடுத்த இந்த பிரிவு உபச்சாரம் நிகழ்ச்சியால் அவரது குடும்பத்தினர் ஆனந்தக் கண்ணீருடன் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement