தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாராபுரத்தில் வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.3,500 லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது

தாராபுரம் : தாராபுரத்தில் வீட்டுக்கு நிரந்தர மின் இணைப்பு வழங்க ரூ.3,500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

Advertisement

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ளது வடக்கு மின்வாரிய அலுவலகம். இங்கு, வணிக ஆய்வாளராக இருப்பவர் ஜெயக்குமார் (56). இவரிடம் தாராபுரம் அருகேயுள்ள இச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் சிவசுப்பிரமணியம் (36), தங்களுக்கு சொந்தமான வீட்டிற்கு நிரந்தர மின்இணைப்பு வழங்ககோரி விண்ணப்பம் அளித்திருந்தார்.

இந்த விண்ணப்பத்தின் மீது விசாரணை நடத்திய ஆய்வாளர் ஜெயக்குமார், நிரந்தர மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ.3,500 லஞ்சமாக கேட்டுள்ளார். இதுகுறித்து சிவசுப்பிரமணியம், திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு நேரில் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சிவசுப்பிரமணியனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். இதை, சிவசுப்பிரமணியம் ஆய்வாளர் ஜெயக்குமாரிடம் நேரில் கொடுத்தபோது மறைவாக இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஜெயக்குமாரை கையும், களவுமாக பிடித்து அவரிடம் இருந்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவரது அலுவலகத்தில் ஆய்வு செய்தபோது கணக்கில் வராத ரூ.13 ஆயிரம் அங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதையும் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம், தாராபுரம் வடக்கு மின்வாரிய அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Related News