இங்கி. பிரதமர் சுனக் வேதனை இனவெறியின் வலியை சிறு வயதில் அனுபவித்தேன்
Advertisement
நாங்கள் வித்தியாசமானவர்கள் என்ற எண்ணம் எங்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும். நாங்கள் பேசும் போது எங்களின் உச்சரிப்பில் எந்த வித்தியாசமும் தெரிந்து விடக்கூடாது என்பதில் என் அம்மா கூடுதல் கவனம் செலுத்தினார். இதற்காக சிறப்பு வகுப்புகளுக்கு எங்களை அனுப்பி சரியாக பேச பயிற்சி கொடுக்கச் செய்தார். நாங்கள் வார்த்தைகளை சரியாக உச்சரிப்பதையே அவர் விரும்பினார். இதற்கு முன், சிறுபான்மையினர் ஒருவர் இங்கிலாந்தில் பிரதமராக வந்ததில்லை. எனவே அப்படி ஒருவர் பிரதமர் ஆவார் என்பதை நான் கனவிலும் நினைக்கவில்லை. எந்தவிதமான இனவெறியும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நான் சந்தித்த வேதனையான அனுபவங்களை என் பிள்ளைகள் எதிர்கொள்ள மாட்டார்கள் என நம்புகிறேன்’’ என்றார்.
Advertisement