தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாய் கொடுத்த தகவல்படி சிறுமியின் நிச்சயதார்த்தம் நிறுத்தம்: குழந்தைகள் நல பாதுகாப்பு அதிரடி

பெரம்பூர்: சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் மலர் (35). இவரது கணவர் ராஜா. இவர் கொத்தனார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக தம்பதி பிரிந்து வாழ்கின்றனர். இதனால் இவர்களது மூத்த மகள் தாயுடனும் இளைய மகள் தந்தை ராஜாவுடனும் வசித்து வந்தனர்.

Advertisement

இந்தநிலையில், ராஜா 2வதாக சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதையடுத்து சங்கீதாவின் உறவினர்ஒருவருக்கும் ராஜாவின் இளைய மகளுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக அவரது தாய் மலருக்கு தெரியவந்துள்ளது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த தாய், உடனே குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பின் அலுவலர் சங்கீதா தலைமையிலான குழுவினர் வந்து கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பகுதியில் இருந்த ராஜாவின் 14 வயது மகளை பத்திரமாக மீட்டு எம்கேபி. அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரிக்கின்றனர். இதுகுறித்து புகாரின்படி, எம்கேபி. நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News