தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஷ்மீரில் இதுவரை 100 முறைக்கு மேல் ஊடுருவிய பாக். தீவிரவாதி சுட்டு கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் 100 முறைக்கு மேல் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் உள்ள குரேஸ் எல்லை பகுதியில் கடந்த 23ம் தேதி பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் எல்லை பகுதியில் நடமாட்டம் காணப்பட்டது. இதையடுத்து சந்தேகத்துக்குரிய ஊடுருவல்காரர்களை நிற்குமாறு கூறினர். ஆனால், அந்த நபர்கள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சுட்டு கொல்லப்பட்ட ஒருவரிடம் இருந்து அதிகாரிகள் அடையாள அட்டையை கைப்பற்றினர். அதில் ஒருவர் பாகு கான் என கண்டறியப்பட்டது. அவர் 1995 முதல் 100க்கும் மேற்பட்ட ஊடுருவல் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதால் அவரை பல ஆண்டுகளாக பாதுகாப்பு படையினர் தேடி வந்தனர். அவர் அனைத்து ஊடுருவல் வழிகளையும் அறிந்திருந்தார். பாதுகாப்பு படையினரிடம் பிடிபடாமல் எளிதாக தப்பித்தும் வந்துள்ளார். இதனால் மனித ஜிபிஎஸ் என்ற பெயர் அவருக்கு வந்தது. கொல்லப்பட்ட 2 பேரும் ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

Advertisement