தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பிஞ்சு குழந்தைகளின் பசியை போக்கிய திருச்சி பெண்: 300 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கி பெண் சாதனை

திருச்சி: திருச்சியை சேர்ந்த பெண் 300 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கி கவனத்தை ஈர்த்துள்ளார். 22 மாதங்கள் தாய்ப்பாலை தானமாக வழங்கி பிஞ்சு குழந்தைகளின் பசியை போக்கிய பெண். திருச்சி மாவட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் செல்வபிருந்தா. இவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்த சமயத்தில் குழந்தைக்கு தேவையான தாய்ப்பாலை கொடுத்த பின்பும் அவரிடம் அதிக அளவு தாய்ப்பால் இருந்துள்ளது. செவிலியர்களின் வேண்டுகோளை அடுத்து தாய்ப்பாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு வழங்க செல்வபிருந்தா ஒப்புக்கொண்டுள்ளார்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின்பும் குழந்தையின் தேவையைவிட அதிகமாக பால் சுரப்பதை உணர்ந்த செல்வபிருந்தா, அதனை தானமாக வழங்க முடிவு எடுத்துள்ளார். அப்போது குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள், சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தேவைப்படுவது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் செல்வபிருந்தா தாய்ப்பாலை தானமாக கொடுக்க தொடங்கியுள்ளார். இப்படி 22 மாதங்கள் தொடர்ந்து 300 லிட்டர் தாய்ப்பாலை செல்வபிருந்தா தானமாக வழங்கியுள்ளார். இதன் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் தாய்ப்பாலுக்காக தவித்த எண்ணற்ற குழந்தைகளின் பசியை செல்வபிருந்தா போக்கியுள்ளார்.

Related News