தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தோனேஷியாவில் மசூதி அருகே குண்டு வெடிப்பு: 20 மாணவர்கள் உள்பட 55 பேர் படுகாயம்

ஜகார்த்தா: இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவின் வடக்கு கெலபா காடிங் பகுதியின் கடற்படை வளாகத்தில் மசூதி ஒன்று உள்ளது. இதனருகே இஸ்லாமிய உயர்நிலை பள்ளியும் இயங்கி வருகிறது. நேற்று வௌ்ளிக்கிழமை என்பதால் மசூதியில் ஏராளமானோர் மதிய நேர தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மசூதியின் ஒருபகுதியில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 20 மாணவர்கள் மற்றும் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் உள்பட 55 பேர் படுகாயமடைந்தனர். மேலும் இந்த குண்டு வெடிப்பு அருகிலிருந்த பள்ளியிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.

Advertisement

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் படுகாயமடைந்த 55 பேரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களில் சிலர் சிகிச்சை முடிந்து திரும்பிய நிலையில், 20 மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறையினர் கூறுகையில், “பள்ளிவாசலில் ஒலி பெருக்கி அருகே குண்டு வெடித்ததாக தெரிகிறது. மேலும், சம்பவ இடத்தில் இருந்து பொம்மை கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் பற்றி விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.

Advertisement

Related News