தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தோனேஷியாவின் 3 ராணுவ விமானங்கள்: சென்னையில் தரையிறங்கி மீண்டும் பயணம்

மீனம்பாக்கம்: ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபிக்கு இந்தோனேஷிய நாட்டின் 3 ராணுவ விமானங்கள் சென்றுவிட்டு, பின்னர் அந்த விமானம் நேற்று மீண்டும் இந்தோனேஷியாவுக்குத் திரும்பி கொண்டிருந்தது. சென்னை வான்வெளியை நெருங்கியபோது, இந்தோனேஷிய ராணுவ விமானிகளுக்கு ஓய்வு தேவைப்பட்டது. இதுகுறித்து டெல்லியில் உள்ள இந்திய விமானப்படை தலைமை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்து, சென்னையில் ஓய்வெடுக்க விமானத்தை தரையிறக்குவதற்கு அனுமதி கேட்டனர்.

Advertisement

இதைத் தொடர்ந்து, அந்த விமானத்தை சென்னையில் தரையிறங்க அனுமதிக்கும்படி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானப்படை அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து, சென்னை பழைய விமானநிலையத்தில் நேற்று இந்தோனேஷியாவின் 3 ராணுவ விமானம் தரையிறங்கியது. பின்னர் அந்த விமானங்கள் ‘ரிமோட் பே’ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த விமானத்தில் இருந்த விமானிகள் உள்பட வீரர்கள் ஓய்வெடுத்தனர். பின்னர், சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து மீண்டும் இன்று காலை இந்தோனேஷியாவின் 3 ராணுவ விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு சென்றது. இது வழக்கமானது தான் என்று விமானநிலைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Advertisement

Related News