தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தோனேஷியா, தாய்லாந்தில் சென்யார் புயலால் ஏற்பட்ட நிலச்சரிவு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 600ஐ நெருங்கியது!!

ஜகார்த்தா : இந்தோனேஷியா, தாய்லாந்தில் சென்யார் புயல் எதிரொலியாக ஏற்பட்ட நிலச்சரிவு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 600ஐ நெருங்கி உள்ளது. வங்கக்கடலில் உருவான சென்சார் புயல் காரணமாக இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கடந்த வாரம் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக இந்தோனேஷியாவில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டன. சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடுவதில் ஏராளமான வீடுகள், வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. 11 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டது.

Advertisement

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 450ஐ நெருங்கியது. 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். சென்யார் புயல் காரணமாக தாய்லாந்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. 12 மாகாணங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 36 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கனமழையால் ஏராளமான வீடுகளை நீர் சூழந்து காணப்படுகிறது. அந்நாட்டில் இதுவரை கனமழை வெள்ளத்திற்கு 170 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இந்தோனேசியா, தாய்லாந்தில் சென்யார் புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 600ஐ நெருங்கி உள்ளது.

Advertisement

Related News