தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்திரா, ராஜீவ் காந்தியுடன் பணியாற்றிய காங். தலைவர்கள் ராகுலால் சோர்வடைந்து விட்டனர்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

தெடியபாடா: இந்திரா, ராஜீவ்காந்தியுடன் பணியாற்றிய காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தியால் சோர்வடைந்து விட்டனர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு ஒருநாள் பயணமாக நேற்று சென்றார். அங்கு, பழங்குடியினர் சமூகத்தின் தெய்வமான பண்டோரி மாதா கோயிலில் வழிபாடு செய்த அவர், பழங்குடியின தலைவர் பகவான் பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு நர்மதா மாவட்டத்தின் தெடியபாடா நகரில் நடந்த ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

Advertisement

அதில், ரூ.9700 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார். அதை தொடர்ந்துசூரத் சென்ற பிரதமர் மோடி அங்கு வசிக்கும் பீகார் மக்களை சந்தித்து அவர்களிடம் பேசுகையில், ‘‘கடந்த பத்தாண்டுகளில் சந்தித்த தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளில் இருந்து காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டும். ‘முஸ்லிம் லீக்-மாவோயிஸ்ட் காங்கிரஸ்’ கட்சியை மக்கள் நிராகரித்துவிட்டனர்.

அது மட்டுமல்லாமல், இந்திரா காந்தி, ராஜிவ் காந்தியுடன் பணியாற்றிய அந்தக் கட்சியில் உள்ள தேசிய தலைவர்கள், ராகுல் காந்தியின் சாகசங்களால் சோகமாக உள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் ஆணையம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆகியவற்றைக் குறை கூறுவதன் மூலம் அவர்கள் தோல்விக்கான காரணத்தை கூற எளிதான வழியைக் கண்டுபிடித்துள்ளனர். பீகாரில் தலித்கள் பெரும்பான்மையாக உள்ள 38 இடங்களில் 34 இடங்களை தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றது. தலித்துகள் கூட காங்கிரசை நிராகரித்துவிட்டனர்’’ என்றார்.

Advertisement