தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இன்டிகோ விமானச் சேவை ரத்து: மணமக்கள் இல்லாமல் நடைபெற்ற திருமண வரவேற்பு: ஆன்லைனில் பங்கேற்று ஆசிபெற்ற புதுமண தம்பதி

 

Advertisement

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியைச் சேர்ந்த மேகா க்‌ஷீரா சாகர் மற்றும் ஒடிசாவின் புவனேஸ்வரைச் சேர்ந்த சங்கிராம் தாஸ் ஆகிய இருவரும் கடந்த நவம்பர் 23ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். டிசம்பர் 3ம் தேதி மணமகளின் சொந்த ஊரான ஹூப்பள்ளியில் வரவேற்புக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. ஹூப்பள்ளியில் உள்ள குஜராத் பவனில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. டிசம்பர் 2ம் தேதியன்று மணமக்கள் இருவருக்கும் புவனேஸ்வரிலிருந்து பெங்களூருவிற்கும், அங்கிருந்து ஹூப்பள்ளிக்கும் விமானத்தில் முன்பதிவு செய்திருந்தனர். புவனேஸ்வரிலிருந்து மும்பைக்கும், அங்கிருந்து ஹூப்பள்ளிக்கும் சில உறவினர்களுக்கு விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன.

ஆனால், டிசம்பர் 2ம் தேதி காலை 9 மணி முதல் மறுநாள் (டிசம்பர் 3ம் தேதி) அதிகாலை வரை 4-5 மணி வரை விமானம் தாமதமானதாகக் கூறிய இன்டிகோ ஊழியர்கள், பின்னர் விமானம் ரத்து செய்யப்பட்டதாகக் கூறினர். அதனால் மணமக்கள் ஹூப்பளிக்கு செல்ல முடியவில்லை. இதையடுத்து வேறு வழியில்லாமல் புவனேஸ்வரில் இருந்தபடியே வீடியோ காலில் கலந்துகொள்ள, ஹூப்பள்ளியில் உறவினர்கள் இருந்தபடி வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. ஹூப்பள்ளியில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்த மேடையில், மணமக்களுக்குப் பதிலாக மணமகளின் பெற்றோர் அமரவைக்கப்பட்டு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இன்டிகோ விமான சேவை ரத்தால் திருமண வரவேற்பு நிகழ்வில் மணமக்களே கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.

Advertisement