தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியாவிற்கு சொந்தமான ஏஐ மாடல் உருவாக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்

Advertisement

புதுடெல்லி: உலகளாவிய செயற்கை நுண்ணறிவு போட்டிக்கு மத்தியில், இந்தியாவும் தனக்கு சொந்தமான ஏஐ பவுண்டேஷன் மாடலை விரைவில் உருவாக்க இருப்பதாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

சீனா சமீபத்தில் வெளியில் டீப்சீக் எனும் செயற்கை நுண்ணறிவு மாடல் உலக அளவில் பிரபலமடைந்து, இத்துறையில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு சவால் விடுத்துள்ளது. இந்நிலையில், இந்தியாவும் தனக்கு சொந்தமான செயற்கை நுண்ணறிவு பவுண்டேஷன் மாடலை உருவாக்க இருப்பதாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘‘இந்தியா உலகத்தரம் வாய்ந்த ஏஐ பவுண்டேஷன் மாதிரியை உருவாக்க உள்ளது. இது உலகம் முழுவதும் உள்ள சிறந்த ஏஐ மாடல்களுடன் போட்டியிடும் வகையில் இருக்கும்.

இந்த பவுண்டேஷன் மாடல், நமது நாட்டிற்காகவும், நமது தேசத்தாலும், நமது மக்களுக்காகவும் எந்த பக்கசார்பற்ற தகவல்களுடன் உருவாக்கப்படும். இதற்காக 18,693 கிராபிக்ஸ் புராசசிங் யூனிட்கள் (ஜிபியு) செயலாக்கப்பட்டுள்ளன. மேலும், ஏஐ பாதுகாப்பு நிறுவனம் விரைவில் தொடங்கப்படும். அடுத்த 8 முதல் 10 மாதத்தில் இந்தியாவின் சுயமான ஏஐ பவுண்டேஷன் மாடல் தயாரிக்கப்படும்’’ என்றார். இந்த பவுண்டேஷன் மாடலில் அனைத்து விதமான பதில்கள், தகவல்கள் சேமிக்கப்படும். இதன் மூலம், இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மலிவு விலையில் ஏஐ செயலிகளை உருவாக்க முடியும்.

Advertisement

Related News