தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பார்வையற்றோருக்கான மகளிர் டி20 சாம்பியன் பட்டம் வென்று அசத்திய இந்திய அணிக்கு முதல்வர், பிரதமர் பாராட்டு

கொழும்பு: இலங்கையில் நடந்த, பார்வையற்றோருக்கான, முதல் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இலங்கையின் கொழும்பு நகரில் பார்வையற்ற மகளிருக்கான முதல் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்தன. அதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்றன. நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில் நேபாளம் அணியுடன் இந்திய மகளிர் அணி மோதியது. முதலில் ஆடிய நேபாளம் 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 114 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி, 12.1 ஓவரில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 117 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், உலக சாம்பியன் பட்டத்தை இந்திய அணி தட்டிச் சென்றது. வெற்றி பெற்ற இந்திய அணிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘துணிவு வழிநடத்தும்போது வரலாறு உருவாகிறது. டி20 கோப்பையை வென்ற, பார்வையற்றோருக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘பார்வையற்றோருக்கான மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்த தொடர் முழுவதும் வெல்ல முடியாத அணியாக இந்திய அணி திகழ்ந்தது பாராட்டுக்கு உரியது. வரலாற்று சிறப்பு வாய்ந்த சாதனையை நமது மகளிர் அணியினர் அரங்கேற்றி உள்ளனர்’ எனக் கூறியுள்ளார்.

Advertisement

Related News