தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போலி வேலைவாய்ப்பு, ஆள் கடத்தல் சம்பவத்தால் இந்தியர்களுக்கு ஈரான் விசா சலுகை ரத்து: ஒன்றிய அரசு கடும் எச்சரிக்கை

புதுடெல்லி: போலி வேலைவாய்ப்பு மோசடிகள் மற்றும் ஆள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசா இல்லா பயண சலுகையை ஈரான் ரத்து செய்துள்ளது. சுற்றுலாவை மேம்படுத்துவதற்காகவும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் இந்தியர்கள் ஈரான் நாட்டிற்கு விசா இல்லாமல் பயணம் செய்யும் சலுகை முன்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த சலுகையை குற்றக் கும்பல்கள் தவறாகப் பயன்படுத்தி வந்தது சமீபத்தில் தெரியவந்தது. குறிப்பாக, இந்தியர்களுக்கு போலி வேலைவாய்ப்பு மற்றும் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஆசைவார்த்தை கூறி, அவர்களை ஈரான் அழைத்துச் சென்று, பின்னர் கடத்தி வைத்துப் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்தன.

Advertisement

இதன் காரணமாக, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான விசா இல்லா பயண சலுகையை ரத்து செய்வதாக ஈரான் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த புதிய உத்தரவு, வரும் 22ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி, சாதாரண பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்தியர்கள், ஈரானுக்குள் நுழையவோ அல்லது ஈரான் வழியாக வேறு நாடுகளுக்குப் பயணம் செய்யவோ இனி கட்டாயமாக முன்கூட்டியே விசா பெற வேண்டும். இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவுறுத்தலில், ‘விசா இல்லாமல் ஈரான் செல்லலாம் என உறுதியளிக்கும் இடைத்தரகர்களிடம் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை அதிகாரப்பூர்வ அரசு வழிகள் மூலம் சரிபார்க்க வேண்டும். ஈரானுக்கு விமானங்களை இயக்கும் நிறுவனங்கள், பயணிகளின் விசாக்களைச் சரிபார்த்த பின்னரே அவர்களை விமானத்தில் ஏற்ற வேண்டும். விசா இல்லாத பயணிகளை அனுமதிக்கக் கூடாது’ என்று கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளன.

Advertisement

Related News