தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2026ம் ஆண்டில் 1,75,025 இந்தியர்கள் ஹஜ் யாத்திரை: சவுதி அரேபியாவுடன் ஒப்பந்தம் கையெழுத்து

புதுடெல்லி: 2026ம் ஆண்டில் ஹஜ் யாத்திரை செல்வதற்கு இந்தியாவிற்கான ஒதுக்கீடு 1,75,025 என்ற ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டு இந்தியா, சவுதி அரேபியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கடந்த 7ம் தேதி சவுதி அரேபியாவில் அரசு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெட்டாவில் சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் தவ்பிக் பின் பவ்சான் அல் ராபியாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இரு அமைச்சர்களும் தற்போதைய ஹஜ் யாத்திரை ஏற்பாடுகள் குறித்து மதிப்பாய்வு செய்தனர்.

Advertisement

சமூகமான மற்றும் வசதியான புனித யாத்திரையை உறுதி செய்வதற்கான வசதிகள், போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் சுகாதார சேவைகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தனர். தொடர்ந்து 2026ம் ஆண்டு இந்திய ஹஜ் பயணிகள் எண்ணிக்கை ஒதுக்கீடு குறித்து அமைச்சர்கள் இருவரும் ஆலோசித்தனர். பின்னர் 2026ம் ஆண்டு இந்தியாவில் இருந்து 1,75,025 பேர் ஹஜ் யாத்திரை செய்வதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது குறித்த ஒப்பந்தத்தில் இரு அமைச்சர்களும் கையெழுத்திட்டனர்.

Advertisement