தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விமானத்தில் சக பயணியின் கழுத்தை நெரித்த இந்திய வம்சாவளி இளைஞர் கைது:தியானம் செய்ததால் தகராறு

Advertisement

வாஷிங்டன்: தியானம் செய்த தகராறால் விமானத்தில் சக பயணியின் கழுத்தை நெரித்த இந்திய வம்சாவளி இளைஞர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் பிலடெல்பியாவில் இருந்து மியாமிக்குச் சென்ற பிரன்டியர் ஏர்லைன்ஸ் விமானத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இஷான் சர்மா (21) என்ற இளைஞர் பயணம் செய்தார். அவருக்கு முன்னால் உள்ள இருக்கையில் கீனு எவன்ஸ் என்ற மற்றொரு பயணி அமர்ந்திருந்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, இஷான் சர்மா திடீரென விசித்திரமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. கீனு எவன்ஸிடம் சென்று, ‘நீ மிகவும் மோசமான மனிதன்; என்னை எதிர்த்தால் உனக்கு மரணம் நிச்சயம்’ என்பது போன்ற மிரட்டல் வார்த்தைகளைக் கூறி சிரித்தார்.

இதனால் அச்சமடைந்த கீனு, விமானப் பணிப்பெண்களிடம் இதுகுறித்து புகார் அளித்தார். அவர்கள், இஷான் சர்மா மீண்டும் தொந்தரவு செய்தால் உதவிக்கான பட்டனை அழுத்தி அழைக்குமாறு கூறியுள்ளனர். இஷான் சர்மாவின் மிரட்டல்கள் தொடர்ந்ததால், மனமுடைந்த கீனு உதவி பட்டனை அழுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இஷான், கீனுவின் இருக்கைக்கு நேரில் சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். திடீரென கீனுவின் கழுத்தைப் பிடித்து நெரிக்கத் தொடங்கியதால், விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற பயணிகள் அவர்களை விலக்கிவிட முயன்றனர். விமானம் மியாமியில் தரையிறங்கியதும், இஷான் சர்மா கைது செய்யப்பட்டார்.

அவர் மீது தாக்குதல் நடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது, இஷான் சர்மாவின் வழக்கறிஞர் கூறுகையில், ‘எனது கட்சிக்காரர் தனது மத நம்பிக்கையின்படி தியானம் செய்து கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் இருந்த பயணிக்கு அது பிடிக்காததாலேயே இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது’ என்றார்.

Advertisement