தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சமூக வலைதளம் மூலம் கசிந்த தகவல்; இந்திய ராணுவ ரகசியங்கள் பாகிஸ்தானுக்கு விற்பனை: ராஜஸ்தான் நபர் அதிரடி கைது

ஜெய்ப்பூர்: இந்திய ராணுவத்தின் முக்கிய தகவல்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்கு அனுப்பியதாக 47 வயது நபர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானை ஒட்டியுள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சல்மார், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருப்பதால் இங்கு உளவுத்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்காக உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் ஹனிப் கான் (47) என்பவரை ராஜஸ்தான் காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறை (நுண்ணறிவு) பிரிவினர் நேற்று கைது செய்தனர்.

Advertisement

ஜெய்சல்மாரின் பசன்பீர் ஜூனி பகுதியைச் சேர்ந்த இவர், பணத்திற்காக இந்திய ராணுவத்தின் முக்கிய தளங்கள் மற்றும் வீரர்களின் நடமாட்டம் குறித்த ரகசியத் தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த குற்றப் புலனாய்வுத்துறை ஐ.ஜி. டாக்டர் விஷ்ணுகாந்த், ‘மாநிலத்தில் நடக்கும் உளவுச் செயல்களுக்கு எதிராக நாங்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாகவே, ஹனிப் கானின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்’ என்று கூறினார். விசாரணையில், ஹனிப் கான் சமூக வலைதளங்கள் மூலம் பாகிஸ்தான் உளவுத்துறையினருடன் நிரந்தரத் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. அவர் மீது அரசு ரகசியங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

Related News