தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம்: வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

 

Advertisement

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முட்டாகி 6 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். இதனை தொடர்ந்து அமீர் கான் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை டெல்லியில் நேற்று சந்தித்தார். இரு நாட்டு அமைச்சர்களும் இரு நாடுகளின் உறவை வலுப்படுத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். அப்போது பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், எல்லைத் தாண்டிய தீவிரவாதம் இரு நாடுகளுக்குமான பொதுவான அச்சுறுத்தலாகும். இந்த அச்சுறுத்தலை எதிர்த்து போராடுவதற்கான முயற்சிகளை இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் ஒருங்கிணைக்க வேண்டும்.

காபூலில் உள்ள இந்தியாவின் தொழில்நுட்ப தூதுக்குழுவானது தூதரக நிலைக்கு மேம்படுத்துப்படுகின்றது” என்றார். தொடர்ந்து பேசிய ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான், இந்தியாவின் நலன்களுக்கு எதிராக தனது நாட்டை பயன்படுத்த ஆப்கானிஸ்தான் எந்த கூறுகளையும் அனுமதிக்காது” என்றார். ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து காபூலில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து இந்தியா தனது அதிகாரிகளை திரும்ப பெற்றுக்கொண்டது. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு இந்தியா தனது தொழில்நுட்ப தூதுக்குழுவை நியமித்தது.

 

Advertisement