தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்திய மகளிர் போராடி தோல்வி: தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

புதுடெல்லி: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி, இந்திய மகளிர் அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. ஏற்கனவே முடிந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன. இந்நிலையில், தொடரை வெல்லும் முனைப்புடன், புதுடெல்லியில் நேற்று நடந்த 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா- ஆஸி அணிகள் மோதின.

Advertisement

முதலில் ஆட்டத்தை துவக்கிய ஆஸி அணி கேப்டன் ஆலிஸா ஹீலி 30 ரன்னில் வீழ்ந்தார். மற்றொரு துவக்க வீராங்கனை ஜார்ஜியா வால், பின் வந்த எலிசி பெரி உடன் இணைந்து அதிரடியாக ஆடி 2வது விக்கெட்டுக்கு 107 ரன் குவித்திருந்தபோது, ஜார்ஜியா, 81 ரன்னில் அவுட்டானார். சிறிது நேரத்தில் எலிசி 68 ரன்னில் வீழ்ந்தார். அடுத்து வந்த பெத் மூனி, புயலாய் மாறி ரன்களை விளாசித் தள்ளினார்.

75 பந்துகளில், ஒரு சிக்சர், 23 பவுண்டரிகளுடன் அவர், 138 ரன்களை குவித்து ஓய்ந்தார். 47.5 ஓவரில், ஆஸி, 412 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. பின், 413 ரன் இலக்குடன் இந்திய மகளிர் களமிறங்கினர். துவக்க வீராங்கனை பிரதிகா ராவல் (10 ரன்), ஹர்லீன் தியோல் (11 ரன்) அவுட்டானபோதும், மற்றொரு துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 63 பந்தில், 5 சிக்சர், 17 பவுண்டரிகளுடன் 125 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 52 ரன் விளாசினார். பின் வந்தோரில், தீப்தி சர்மா சிறப்பாக ஆடி 72 ரன் குவித்தார். கடைசியாக, 47 ஓவரில், இந்தியா 369 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. அதனால், 43 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸி, 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

Advertisement

Related News