தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்திய பயனாளிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ஓபன் ஏஐ: சாட் ஜிபிடியின் கோ-1 சேவை ஒரு வருடத்துக்கு இலவசம்

புதுடெல்லி: இந்திய பயனாளர்களுக்கு சாட் ஜிபிடியின் கோ-1 சேவை ஒரு வருடத்துக்கு இலவசமாக அளிக்கப்படும் என ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. இணைய உலகில் தற்போது ஏஐ என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதில் ஓபன் ஏஐ நிறுவனம், கூகுளின் ஜெமினி, எக்ஸ் தளத்தின் க்ரோக் உள்பட ஏராளமான நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு சந்தையில் போட்டியிட்டு வருகின்றன. அதில் ஒன்றாக சாட் ஜிபிடியின் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் கோ-1 இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சாட் கோ- 1 என்பது அதிக தகவல்களை சேரிப்பது, புகைப்பட உருவாக்கம் மற்றும் கோப்பு பதிவேற்றங்களை வழங்குகிறது.இதற்கு மாதம் 399 ரூபாய் சந்தாவாக வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள பயனாளர்களை கவரும் விதமான சாட் ஜிபிடி கோ-1 சந்தா சேவை ஓராண்டுக்கு இலவசமாக அளிக்கப்படும் என ஓபன் ஏஐ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகை மூலம் இந்திய பயனர்கள் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவிகளை இலவசமாக அணுக முடியும் என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Related News