தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்திய பங்குச்சந்தையில் கடும் சரிவு முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.9.78 லட்சம் கோடி இழப்பு

Advertisement

மும்பை: இந்திய பங்குச்சந்தைகளில் நேற்று கடும் சரிவு ஏற்பட்டது. ஒரே நாளில் ரூ.9.78 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரம் அடைந்த போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் பாதிப்பை சந்தித்தன. முந்தை நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 84,266 புள்ளிகளில் நிறைவடைந்திருந்தது. இந்நிலையில், நேற்று வர்த்தகம் துவங்கியபோதே 83,002 புள்ளிகளில் சரிவுடன் துவங்கியது. அதிகபட்சமாக 82,434 புள்ளிகள் வரை வீழ்ச்சி அடைந்தது. நாள் முழுவதும் சரிவுடனேயே நீடித்தது.

வர்த்தக முடிவில் முந்தைய நாளை விட 2.1 சதவீதம், அதாவது 1,769 புள்ளிகள் சரிந்து 82,497 புள்ளிகளானது. இதுபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி 547 புள்ளிகள் சரிந்து 25,250 புள்ளிகளில் நிறைவடைந்தது. இந்த கடும் சரிவால், மும்பை பங்குச்சந்தையில் ரூ.4,74,86,464 கோடியாக இருந்த பங்குகளின் மதிப்பு, ரூ.9,78,778 கோடி சரிந்து ரூ.4,65,07,685 கோடியானது. இதுபோல், கடந்த செப்டம்பர் 30ம் தேதியிலும் பங்குகளின் மதிப்பு ரூ.3,57,885 கோடி வீழ்ச்சி அடைந்தது. அதாவது 3 நாட்களிலேயே பங்குகளின் மதிப்பு ரூ.13,36,664 கோடி சரிந்ததுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் ஒரு புறம் இருக்க, சீனாவில் முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்ததால், இந்தியாவுக்கு வர வேண்டிய வெளிநாட்டு பங்கு முதலீடுகள் சீனாவுக்கு திரும்பியுள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News