தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை: தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Advertisement

சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து, பூந்தமல்லி தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. மதுரையை சேர்ந்தவர் சரவணகுமார் (எ) அப்துல்லா (33), இவர் இஸ்லாமிய தேசம் ஒன்றை இந்தியாவில் தனியாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும் பல்வேறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஆதரவு திரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும் இவர் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி மதுரை போலீசாரால் கடந்த 2021ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

பின்னர் இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு சிறப்பு முகமை போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துகளை பதிவிட்ட சரவணக்குமார் (எ) அப்துல்லாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இளவழகன் தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மோகன் ஆஜராகி வாதாடி உள்ளார்.

Advertisement