தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்திய ராணுவ கல்லூரியில் பயில வரும் 15க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: இந்திய ராணுவ கல்லூரியில் 2026ம் கல்வியாண்டு 8ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுக்கு வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் 2026ம் கல்வியாண்டு 8ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு டிசம்பர் 7ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு சென்னையிலும் நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் மாதிரி வினாத்தாள் தொகுப்பை ‘கமாண்டன்ட், ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி, டேராடூன், உத்தரகாண்ட் - 248003’ என்ற முகவரிக்கு விரைவு தபால் வழியே விண்ணப்ப கடிதம், கேட்புக் காசோலை ஆகியவற்றை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். பொதுப்பிரிவினர் ரூ.600க்கும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.555க்கும் காசோலை எடுக்க வேண்டும். பட்டியலினத்தவர்கள் சாதி சான்றிதழ் நகலும் சேர்த்து அனுப்ப வேண்டும். அதன்பின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்த தகவலை பள்ளி மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆர்வமுள்ளவர்கள் சேர்க்கை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement