தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்க விமான நிலையத்தில் இந்திய பெண் தொழிலதிபரிடம் அத்துமீறல்: ஆண் அதிகாரி தனது உடலை சோதித்ததாக புகார்

Advertisement

நியூயார்க்: அமெரிக்க விமான நிலையத்தில் இந்திய பெண் தொழிலதிபரை ஆண் அதிகாரி ஒருவர் அவரது உடலை தொட்டு சோதனை நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. இந்திய பெண் தொழில்முனைவரான ஸ்ருதி சதுர்வேதி, அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள ஆங்கரேஜ் விமான நிலையத்தில் அதிகாரிகளால் மோசமாக நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‘ஆங்கரேஜ் விமான நிலையத்தில் என்னை ஆண் அதிகாரி ஒருவர் பரிசோதித்தார். எனது உடலை தொட்டு அவர் பரிசோதனை செய்தார். கிட்டத்தட்ட 8 மணி நேரம் குளிர்ந்த அறையில் தடுத்து வைக்கப்பட்டேன். எனது மொபைல் ஃபோனும், பணப்பையும் பறிமுதல் செய்யப்பட்டது. என்னிடம் அமெரிக்க காவல்துறை மற்றும் எஃப்.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தொலைபேசி அழைப்பு மற்றும் கழிவறை பயன்பாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் எனது விமான பயணத்திட்டம் தடைபட்டது. எனது பையில் ‘பவர் பேங்க்’ இருந்ததால், என்னிடம் பலகட்ட பரிசோதனை நடந்ததாக அதிகாரிகள் கூறினர். இந்த மோசமான அனுபவம் என்னை காயப்படுத்தியது’ என்று கூறியுள்ள அவர், தனது பதிவை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் வெளியுறவு அமைச்சகத்திற்கு டேக் செய்து விவரித்துள்ளார். இந்திய பெண் தொழில்முனைவர் ஒருவர் அமெரிக்காவில் நடத்தப்பட்ட விதம் குறித்து சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Related News