தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விபரீத முயற்சியில் ஈடுபட்டால் சிந்தூர் 2.0; இந்திய எல்லையில் ஊடுருவ பதுங்கியிருக்கும் 120 தீவிரவாதிகள்: காஷ்மீர் மண்டல ஐஜி எச்சரிக்கை

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் அத்துமீறினால் ஆபரேஷன் சிந்தூர் இரண்டாம் கட்டத் தாக்குதலை நடத்தத் தயாராக இருப்பதாக எல்லைப் பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மே மாதம் இந்திய ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் முதல் கட்டத் தாக்குதலை நடத்தின. இதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மற்றும் ராணுவ நிலைகள் அழிக்கப்பட்டன.

Advertisement

இந்தியாவின் இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்த பாகிஸ்தான், தனது துப்பாக்கிச் சூட்டு எல்லைக்குள் இருந்த பயங்கரவாத முகாம்களை அங்கிருந்து அகற்றி, சற்றுத் தொலைவில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றிக்கொண்டது. இந்நிலையில், எல்லையில் மீண்டும் பயங்கரவாதிகள் குவிக்கப்பட்டு வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படையின் காஷ்மீர் மண்டல ஐஜி அசோக் யாதவ் கூறும்போது, ‘எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உள்ள 69 ஏவுதளங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன; அங்கு சுமார் 100 முதல் 120 பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவத் தயாராகக் காத்திருக்கின்றனர்.

பாகிஸ்தான் மீண்டும் ஏதேனும் விபரீத முயற்சியில் ஈடுபட்டால், ஆபரேஷன் சிந்தூர் 2.0 மூலம் முன்பை விட மிகக் கடுமையான பதிலடி கொடுக்க நாங்கள் முழுத் தயார் நிலையில் உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார். பனிப்பொழிவு தொடங்கும் முன் ஊடுருவலைத் தடுக்க நவீன கண்காணிப்பு சாதனங்களுடன், பெண் வீராங்கனைகள் அடங்கிய படைகளும் எல்லையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement