தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராஜஸ்தானில் இந்திய விமானப் படையின் போர் விமானம் விழுந்து விபத்து: 2 விமானிகள் உயிரிழப்பு

Advertisement

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இந்திய விமானப் படையின் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 விமானிகளும் உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்தில் உள்ள பனோடா கிராமத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஜாகுவார் விமானம் விழுந்து விபத்திற்குள்ளானது. வான்வெளியில் தடுமாறியபடி பறந்த விமானம், வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. கிராம மக்கள் அளித்த தகவலின்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

நொறுங்கிய விமான பாகங்களுக்கு அருகே பயிற்சி விமானியின் உடல் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது மீட்புப் பணிகள் நிறைவுற்ற நிலையில் இரண்டு விமானிகளும் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது.ஜாகுவார் ரக விமானம் விபத்தில் சிக்குவது கடந்த 3 மாதங்களில் இது இரண்டாவது முறையாகும்.

இது குறித்து பாதுகாப்புப் படை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் இன்று பிற்பகல் ஐஏஎஃப் ஜாகுவார் ரக போர் விமானம் ஒன்று வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த பயிற்சி விமானிகள் இருவர் உயிரிழந்தனர். இந்தத் துயர்மிகு தருணத்தில் அந்த விமானிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement