இந்திய வௌியுறவுக்கொள்கையை அழிக்க அமைச்சர் ஜெய்சங்கர் முயற்சி: ராகுல் காந்தி கடும் தாக்கு
இந்த சந்திப்பு தொடர்பான அமைச்சரின் விளக்கம் குறித்து காங்கிரஸ் கடுமையாக சாடி உள்ளது. இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தன் எக்ஸ் பதிவில், “சீன வௌியுறவு அமைச்சர் இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்தித்து இந்தியா சீனா உறவுகளில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றி விளக்கம் அளிப்பார் என நினைக்கிறேன். இந்திய வௌியுறவு கொள்கையை அழிக்கும் நோக்கில் அமைச்சர் ஜெய்சங்கர் ஒரு மிகப்பெரிய சர்க்கசை நடத்தி வருகிறார்” என காட்டமாக தெரிவித்துள்ளார்.