தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்திய துணை தூதரகத்திற்கு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ள சம்பவத்தால் அதிர்ச்சி..!!

கனடா: இந்திய துணை தூதரகத்திற்கு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவில் காலிஸ்தான் ஆதாராளரான ஹர்தீப்சிங் நிஜார் கடந்த 2023ம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஷரின் நகரில் படுகொலை செய்யப்பட்டார். அவரது படுகொலையை தொடர்ந்து இந்திய அரசுக்கு இதில் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் த்ருடோ குற்றம்சாட்டி இருந்தார். இந்த அக்குற்றச்சாட்டை இந்தியா முற்றிலும் மறுத்தது. இந்த கொலை வழக்கில் 4 இந்தியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Advertisement

இதற்கிடையில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் கனடாவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் வழிபாடு தளங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பிறகு இந்தியா கனடாவுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனை அடுத்து கனடா பிரதமராக மார்க் கார்னி பதவியேற்ற பிறகு இந்தியா, கனடா இடையேயான உறவு படிப்படியாக திரும்பி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு கனடாவில் செயல்பட்டு வரும் காலிஸ்தானின் ஆதரவு பெற்ற சிகேஎஸ் பார் ஜஸ்டிஸ் என்ற பயங்கரவாத அமைப்பு இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமர் ஹர்தீப்சிங் நிஜார் படுகொலையில் இந்தியர்களுக்கு பங்கு இருப்பதாக முன்னாள் பிரதமர் ஜஸ்டின் பார்லிமென்டில் தெரிவித்திருந்தார். ஆனால் 2 ஆண்டுகள் கடந்தும் இந்திய தூதரகங்கள் காலிஸ்தான் இயக்கத்தினரை குறிவைத்து உலக வலையமைப்பை உருவாக்கி உள்ளனர். இதனால் நாளை காலை 8 மணிக்கு தொடங்கி 12 மணிக்குள் 4 மணி நேர்தத்திற்குள் இந்திய தூதரகத்தை முற்றுகை இட போவதாக அறிவித்துள்ளனர். அதே சமயம் இந்திய தூதரகத்திற்கு வர நினைப்பவர்கள் வர வேண்டாம் என மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி கனடாவின் இந்திய தூதர் தினேஷ் பட்நாயக் முகம் கொண்ட போஸ்டரை பயங்கர வாதிகள் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement