தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அமெரிக்காவின் வரிவிதிப்பு மிரட்டல்; யாருக்கும் இந்தியா அடிபணியாது: ஒன்றிய அமைச்சர் திட்டவட்டம்

புதுடெல்லி: சர்வதேச வர்த்தக நெருக்கடிகளுக்கு மத்தியில், யாருக்காகவும் இந்தியா ஒருபோதும் அடிபணியாது என ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் கொள்முதல் செய்வதால், இந்தியப் பொருட்கள் மீது 50 சதவீதம் கூடுதல் வரி விதிப்பது போன்ற நெருக்கடிகள் அமெரிக்கா தரப்பில் கொடுக்கப்படும் நிலையில், ஒன்றிய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த பேட்டியில், ‘இன்றைய இந்தியா மிகவும் வலிமையான, தன்னம்பிக்கை மிக்க நாடாகத் திகழ்கிறது. யாருக்காகவும் நாங்கள் அடிபணிய மாட்டோம்.

ஐரோப்பிய வர்த்தகக் கூட்டமைப்பான எப்டா நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, ‘4 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்; உலகில் வேகமாக வளரும் நாடு; எங்களிடம் இளைஞர் சக்தி உள்ளது’ என்று தெரிவித்தோம். அதன் விளைவாக, அந்த நாடுகள் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தம் வரும் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும்’ என்று அவர் கூறினார். மேலும் அவர் பேசுகையில், ‘இந்தியப் பொருளாதாரம் செத்துவிட்டது என்று கூறிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு மூத்த தலைவரின் பேச்சு வெட்கக்கேடானது.

நாட்டின் மாபெரும் வளர்ச்சிப் பாதையை இழிவுபடுத்தும் அவரது கருத்துகளுக்காக நாடு அவரை மன்னிக்காது. இன்று இந்தியாவின் நாணயம், அந்நியச் செலாவணி கையிருப்பு, பங்குச் சந்தைகள் என அனைத்தும் வலுவாக உள்ளன. உலக வளர்ச்சிக்கு 16 சதவீத பங்களிப்பை இந்தியா வழங்கி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் எனப் பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம்’ என்றார்.

Related News