தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியாவுக்கு எதிராக அவதூறு பரப்பிய டிரம்ப் ஆலோசகர்; மூக்கை உடைத்தது எலான் மஸ்கின் ‘எக்ஸ்’ தளம்; அமெரிக்காவின் இரட்டை வேடம் அம்பலம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசகரின் இந்தியாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை, சமூக வலைதளமான ‘எக்ஸ்’ உண்மைகளை அடுக்கி முறியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகரான பீட்டர் நவரோ, தொடர்ச்சியாக இந்தியாவுக்கு எதிராகப் பேசி வருபவர் ஆவார். இவர் இந்தியாவை ‘வரிகளின் மகாராஜா’, ‘கிரெம்ளினின் (ரஷ்யா) சலவையகம்’ என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

Advertisement

உக்ரைன் போரை ‘மோடியின் போர்’ என்றும், ‘இந்திய மக்களின் உழைப்பைச் சுரண்டி பிராமணர்கள் லாபம் ஈட்டுகின்றனர்’ என்றும் கூறி சர்ச்சைகளைக் கிளப்பினார். மேலும், ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி, இந்தியப் பொருட்களின் இறக்குமதி மீது கூடுதலாக 25% வரி விதித்து, மொத்த வரியை 50% ஆக உயர்த்தியதிலும் இவரது பங்கு முக்கியமானது. இந்தியாவின் இறையாண்மையில் தலையிடும் வகையிலான இவரது கருத்துக்களை ஒன்றிய அரசு தொடர்ந்து நிராகரித்து வந்தது.

இந்த பின்னணியில், தற்போது தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில், ‘ரஷ்யாவிடம் இருந்து லாபத்திற்காக மட்டுமே இந்தியா எண்ணெய் வாங்குகிறது. அந்த வருவாய் ரஷ்யாவின் போர் இயந்திரத்திற்கு எரிபொருளாகிறது. இதனால் உக்ரைனியர்களும், ரஷ்யர்களும் இறக்கின்றனர். அமெரிக்க வரி செலுத்துவோர் பாதிக்கப்படுகின்றனர்’ என்று பதிவிட்டிருந்தார். இவ்வாறு கருத்து பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே எலான் மஸ்கின் ‘எக்ஸ்’ தளம், அந்தப் பதிவில் உண்மை சரிபார்ப்பு குறிப்பு ஒன்றை இணைத்தது. அதில், ‘இந்தியா லாபத்திற்காக இன்றி, தனது தேசிய எரிசக்தி பாதுகாப்பிற்காகவே ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குகிறது. இதில் எந்தவொரு சர்வதேசத் தடைகளையும் மீறவில்லை.

மேலும், அமெரிக்காவே ரஷ்யாவிடம் இருந்து யுரேனியம் போன்ற கனிமங்களை இறக்குமதி செய்வது அதன் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த பீட்டர் நவரோ, ‘எலான் மஸ்க் தனது தளத்தில் பிரசாரத்தை பரப்புகிறார்’ என்று கடுமையாகத் தாக்கி மீண்டும் பதிவிட்டார். உடனடியாக அந்தப் பதிவிற்கும் ‘எக்ஸ்’ தளம் பதிலடி கொடுத்தது. இந்தியாவின் வர்த்தகம் அதன் இறையாண்மை மிக்க முடிவு என்றும், அது சர்வதேச சட்டத்தை மீறவில்லை என்றும் மீண்டும் அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை சுட்டிக்காட்டியது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘பீட்டர் நவரோவின் தவறான கருத்துக்களை நாங்கள் நிராகரிக்கிறோம்’ என்று பதிலளித்துள்ளார்.

Advertisement

Related News