தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கம்; வார்த்தைகளே வரவில்லை... மிக கடினமாக இருக்கிறது: கருண்நாயர் ஆதங்கம்

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயர் பெயர் இடம்பெறாதது, அவரைக் கடும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்குத் திரும்பிய கருண் நாயர் அதில் பெரிதாக ரன் குவிக்கவில்லை. ரோகித் சர்மா, விராட் கோஹ்லி போன்ற மூத்த வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில், அணியின் மிடில் ஆர்டருக்கு அனுபவம் சேர்க்கும் முக்கிய வீரராக அவர் பார்க்கப்பட்டார். ஆனால், அந்தத் தொடரில் அவர் எதிர்பார்த்த அளவிற்குச் சோபிக்கவில்லை. 5 போட்டிகளில் ஆடிய அவர், 8 இன்னிங்ஸ்களில் 25.62 என்ற சராசரியுடன், ஒரே ஒரு அரைசதத்துடன் 226 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

Advertisement

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து தன்னை நீக்கியது குறித்து கருண்நாயர் பேசுகையில் “நான் நிச்சயம் அணியில் தேர்வு செய்யப்படுவேன் என்று எதிர்பார்த்தேன். இப்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வார்த்தைகளே வரவில்லை. மிகவும் கடினமாக இருக்கிறது. தேர்வு குழுவின் இந்த முடிவுக்கு நீங்கள் தேர்வுக் குழுவினரிடம்தான் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்கவேண்டும். எனக்கு தெரிந்தவரையில், கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வேறு யாரும் ரன் அடிக்காத நிலையில், நான் 50 ரன்கள் அடித்தேன். கடினமான சூழலில் அடிக்கப்பட்ட அந்த அரைசதம், ஒரு சதத்திற்கு இணையானது என்று நான் நம்புகிறேன். இந்தியா வெற்றி பெற்ற அந்தக் கடைசிப் போட்டியில், அணிக்கு நான் பங்களித்ததாகவே நினைத்தேன்’’ என்று ஆதங்கமாக கூறினார்.

Advertisement