தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலை எஸ்ஐஆர் ஏற்படுத்தி உள்ளது: திருமாவளவன் பேட்டி

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் அவருடைய கட்சியைச் சார்ந்த பலர் என்னை சந்தித்தார்கள். அப்போது அவர்கள் முன்வைத்த முக்கியமான கோரிக்கை தொடர்பாக முதல்வரை சந்தித்து ஒரு மனுவை வழங்கி இருக்கிறோம். எஸ்ஐஆர்க்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் 24ம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவித்து இருக்கிறோம். பாஜவும் தேர்தல் ஆணையமும் இணைந்து செய்யும் கூட்டு சதி, அவர்கள் குடியுரிமையை பறிக்கும் செயல்திட்டமாகவும், எதிர் வாக்குகளை பட்டியியலில் நீக்கவும் இதனை வடிவமைத்து இருக்கிறார்கள். பீகார் தேர்தல் முடிவுக்கு பிறகு எஸ்ஐஆர் இந்தியா வுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. ஜனநாயகத்தைக் கொன்று புதைக்கின்ற சதி திட்டம் தான் நாடாளுமன்றத்தை கேள்விக்குறியாக்கும். மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பது அடிப்படையில் தான் இந்த எஸ்ஐஆர் செய்யப்பட்டுள்ளது. சிஏஏ குடியுரிமை திட்டத்தை செயல்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிதான் இது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இது நல்லது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Advertisement