தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியாவில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா: லண்டனில் தஞ்சம் அடைய உள்ளதாக தகவல்

 

Advertisement

டெல்லி: இந்தியாவில் தஞ்சமடைந்த வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் இருந்து புறப்பட்டார். இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தின் வலுவான பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா. வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்ததால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பி ஓடினார். அதைத் தொடர்ந்து பிரதமர் மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பல பொருட்களையும் திருடி சூறையாடினர். அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள சூழலில், ராணுவம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது.

நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா டெல்லியில் தஞ்சமடைந்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் அடைக்கலம் கோரி இருந்த நிலையில் அந்நாட்டின் அனுமதிக்காக காத்திருந்தார். இந்நிலையில் ஷேக் ஹசீனாவை இந்தியாவுக்கு நேற்று அழைத்து வந்த வங்கதேச விமானம் இன்று காலை இந்தியாவில் இருந்து புறப்பட்டது. டெல்லி அருகே ஹிண்டன் விமானப்படை தளத்தில் இருந்து வங்கதேச விமானம் புறப்பட்டுச் சென்றது. ஹிண்டன் விமானப்படை தளத்தில் இருந்து இன்று காலை 9 மணிக்கு வங்கதேச விமானம் புறப்பட்டது.

வங்கதேச விமானப்படையின் C-1301J விமானம் ஹிண்டன் விமான தளத்தில் இருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது. ஷேக் ஹசீனா லண்டனில் தஞ்சம் அடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேச விமானம் அடுத்த இலக்கை நோக்கி புறப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைப்புகள் தகவல் தெரிவித்துள்ளன. வங்கதேச விமானத்தை இந்திய பாதுகாப்பு அமைப்புகள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறியுள்ளது.

Advertisement

Related News