தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

‘மோதலை பெரிதாக்க வேண்டாம்’ இந்தியா-பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தல்: வெளியுறவு அமைச்சர்களுடன் பேச முடிவு

Advertisement

நியூயார்க்: இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ‘மோதலை பெரிதாக்க வேண்டாம்’ என இரு நாடுகளையும் அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகி உள்ளது. இந்நிலையில், வாஷிங்டனில் நேற்று முன்தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமெரிக்க வெளியுறவுச் செய்தி தொடர்பாளர் டாமி புரூஸ், ‘‘காஷ்மீர் நிலவரம் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளையும் அணுகி மோதலை பெரிதாக்க வேண்டாம் என வலியுறுத்த உள்ளோம்.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இன்றோ, நாளையோ இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களை தொடர்பு கொண்டு இதுதொடர்பாக பேச உள்ளார். இந்த பிரச்னையில் மற்ற பிற நாடுகளின் தலைவர்களும், வெளியுறவு அமைச்சர்களும் தலையிடுமாறு கேட்டுக் கொண்டு வருகிறோம்’’ என்றார். சமீபத்தில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அளித்த பேட்டியில், ‘‘கடந்த 30 ஆண்டாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்காக தீவிரவாதத்தை ஆதரிக்கும் இழிவான வேலையை செய்து வந்தோம்’’ என கூறியிருந்தார்.

இது குறித்து டாமி புரூசிடம் கேட்டதற்கு, ‘‘இந்தியா, பாகிஸ்தான் அரசுகளுடன் தொடர்பில் இருக்கிறோம். வெளியுறவு மட்டத்தில் மட்டுமல்ல, பல அமைச்சகங்களுடன் ஆலோசிக்கிறோம். இந்த பிரச்னையில் பொறுப்பான தீர்வுக்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட நாங்கள் ஊக்குவிக்கிறோம். உலகம் இதை கவனிக்கிறது. இதை தவிர கூடுதல் விவரம் என்னிடம் இல்லை’’ என நேரடியாக பதிலளிக்காமல் நழுவினார்.

Advertisement