தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது: உச்ச நீதிமன்றத்தில் புதிய விளக்க மனு

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை அபத்தமானது என்பது மட்டுமில்லாமல் ஜனநாயகத்திற்கு எதிரானதாகும் என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
Advertisement

டந்த இரு தினங்களுக்கு முன்பு வரையில் பீகார் மாநிலத்தில் சுமார் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  இந்த சூழலில் பீகார் மாநில வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த விவகாரம் தொடர்பாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் தரப்பில் ஒரு புதிய விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,‘‘வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பான விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கேட்கும் 11 ஆவணங்களில் நிரந்தர குடியிருப்பு ஆவணம், பாஸ்போர்ட், ஓபிசி-எஸ்சி-எஸ்டி உள்ளிட்ட ஆவணங்களை பெறுவதற்கு ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் வாக்காளர் தீவிர திருத்த நடவடிக்கைகளில் மட்டும் ஏன் வாக்காளர் அடையாள அட்டையை, ஆதாரை ஆதாரமாக தாக்கல் செய்யும் விதமாக இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தேர்தல் ஆணையத்தின் மீது மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இது ஒரு அபத்தமான செயல் என்பது மட்டுமில்லாமல், ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். தேர்தல் ஆணையத்தின் இந்த செயல்பாடு வாக்காளர்களின் வாக்குரிமையை இழக்கச் செய்யும் நோக்கமாக உள்ளது என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement