கொல்கத்தா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் பலத்த நிலநடுக்கம்
கொல்கத்தா: கொல்கத்தா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் பகுதிகளில் காலை 10:10 பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. வங்கதேசத்தின் டாக்காவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வடகிழக்கு மற்றும் கொல்கத்தா முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ...
அமைச்சர் பங்களாவுக்குள் சுற்றிய சிறுத்தை
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே அமைச்சரின் பங்களாவுக்குள் சிறுத்தை நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தான் நீர்வளத்துறை அமைச்சர் சுரேஷ்சிங் ராவத் பங்களாவுக்குள் நுழைந்த சிறுத்தையை வனத்துறை பிடித்தது. ...
உலகின் 100 சிறந்த வங்கிகள் பட்டியலில் மேலும் சில இந்திய வங்கிகளுக்கு இடம்: ரிசர்வ் வங்கி ஆளுநர் நம்பிக்கை
புதுடெல்லி: பொருளாதார விரிவாக்கம் வளர்ச்சியின் வேகத்தை கருத்தில் கொண்டு உலகின் முதல் 100 வங்கிகள் பட்டியலில் மேலும் சில இந்திய வங்கிகள் மற்றும் கடன் வழங்குனர்கள் இடம் பெறுவார்கள் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லி பொருளாதார பள்ளியில் விகேஆர்வி.ராவ் நினைவு சொற்பொழிவு நேற்று நடந்தது. இதில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய்...
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு சிபிஐ கோர்ட்டில் ஜெகன்மோகன் 6 ஆண்டுகளுக்கு பிறகு ஆஜர்
திருமலை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி நேற்று சிபிஐ கோர்ட்டில் ஆஜரானார். 6 ஆண்டுகளுக்கு பிறகு அவர் ஆஜரானதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆந்திராவில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் முதல்வர் பதவியை இழந்த ஜெகன்மோகன்ரெட்டி கர்நாடக மாநிலம்...
தெற்கு நேபாளத்தில் கம்யூ.- ஜென் ஜி மோதல்
காத்மாண்டு: தெற்கு நேபாளத்தின் பாரா மாவட்டத்தில் நேற்று முன்தினம் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஎன்-யுஎம்எல்) மற்றும் ஜென் ஜி இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நேற்று பாரா மாவட்டம், சிமாரா சவுக் என்ற இடத்தில் ஜென் ஜி இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்...
ஒன்றிய அரசுடன் இணைந்து புதிய திட்டம் கல்வித்துறையிலும் அதானி குழுமம்: அகமதாபாத்தில் 3 நாள் ஆலோசனை
அகமதாபாத்: அதானி குழுமமும், ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் இந்திய அறிவு அமைப்புகள் உடன் இணைந்து, நவம்பர் 20 முதல் 22 வரை அகமதாபாத்தில் உள்ள அதானி கார்ப்பரேட் ஹவுஸில் ‘இந்தோலஜி’ எனப்படும் இந்திய நாகரீகம், மொழிகள், தத்துவம், அறிவியல், கலாச்சார பாரம்பரியம் பற்றிய உலக அளவிலான கல்வி ஆய்வை நடத்தி வருகிறது. இதன் மூலம் இந்தியாவின்...
10வது முறையாக பதவியேற்பு பீகார் முதல்வரானார் நிதிஷ்குமார்: 26 அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணம்
பாட்னா: பீகார் மாநிலத்தில் 10வது முறையாக நிதிஷ்குமார் பதவி ஏற்றார். அவருடன் 26 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். பீகார் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 243 இடங்களில் 202 இடங்களை கைப்பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து பீகார் மாநிலத்தில் 10வது முறையாக நேற்று நிதிஷ்குமார் முதல்வர் பதவி ஏற்றார். பாட்னாவில்...
தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு
புதுடெல்லி: வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தப் பட்டியல் தமிழ்நாட்டில் தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் அதிமுக எம்பிக்கள் சி.வி.சண்முகம் மற்றும் இன்பதுரை ஆகியோர் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒரு கோரிக்கை மனுவை நேற்று கொடுத்துள்ளனர். இதையடுத்து அவர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதில், ‘‘எஸ்.ஐ.ஆர் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பான விதிமுறைகளை தேர்தல்...
டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் 3 தீவிரவாத டாக்டர்கள் உட்பட 4 பேரை கைது செய்தது என்ஐஏ: 10 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
புதுடெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய முக்கிய குற்றவாளிகளான 3 டாக்டர்கள் மற்றும் மத பிரச்சாரகரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நேற்று கைது செய்தது. டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி நடந்த கார் வெடிகுண்டு தற்கொலை படை தாக்குதலில் 15 பேர் பலியாகினர். காரில் வெடிபொருட்களுடன் தாக்குதலை நடத்திய காஷ்மீர்...