நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத்துறை விசாரணை!!

ஐதாராபாத்: ஆன்லைன் ரம்மி செயலிக்கு விளம்பரம் கொடுத்த நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டவிரோத சூதாட்ட செயலியை ஊக்குவிக்கும் வகையில் விளம்பரத்தில் நடித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியதை அடுத்து ஐதாராபாத் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விஜய் தேவரகொண்டா விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். ...

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்..!!

By Lavanya
35 minutes ago

டெல்லி: மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஓராண்டுக்கு மேலாக வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு முறையீடு செய்தது. மேகதாது அணை தொடர்பான வழக்கை விசாரிக்க அமர்வை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கையும் வைத்தது. ஏற்கனவே 3 அமர்வுகள் விசாரணை நடத்துவதால் அங்கு சென்று முறையிட...

கேரளாவில் இன்றும் மாநிலம் முழுவதும் கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை

By Lavanya
an hour ago

கோழிக்கோடு: கேரளாவில் இன்றும் மாநிலம் முழுவதும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.கேரளாவில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்துவரும் நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், வயநாடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்...

டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் செயின் பறித்த நபர் கைது!!

By Nithya
2 hours ago

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் செயின் பறித்த நபரை போலீசார் கைது செய்தனர். டெல்லியில் 2 நாட்களுக்கு முன்பு எம்.பி. சுதாவிடம் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் 4 சவரன் நகையை பறித்தார். ...

ஒடிசாவில் இரவு நேரங்களில் வணிக நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய அம்மாநில அரசு அனுமதி

By MuthuKumar
5 hours ago

ஒடிசாவில் இரவு நேரங்களில் வணிக நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது. இரவு நேர பணியில் குறைந்தது 3 பெண் ஊழியர்கள் இருக்க வேண்டும் என் ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. ...

பிரதமர் மோடி-அதிபர் மார்கோஸ் சந்திப்பு இந்தியா-பிலிப்பைன்ஸ் இடையே 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது: நேரடி விமான சேவை தொடங்கவும் ஒப்புதல்

By Karthik Yash
10 hours ago

புதுடெல்லி: இந்தியா, பிலிப்பைன்ஸ் இடையேயான தூதரக உறவு 75 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாக பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் 5 நாள் அரசு முறை பயணமாக டெல்லி வந்துள்ளார். ஜனாதிபதி மாளிகைக்கு நேற்று வந்த அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி இருவரும் அதிபர் மார்கோசை வரவேற்றனர். இதைத்...

வன்னியர் சங்க கட்டிடம் விவகாரம் கோயில் புறம்போக்காக இருந்தாலும் அரசு நிலமே: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்

By Karthik Yash
10 hours ago

புதுடெல்லி: செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பரங்கிமலை பட் சாலையில் உள்ள 41,952 சதுர அடி நிலத்தை, காசி விஸ்வநாதர் தேவஸ்தானம் தற்காலிகமாகப் பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. ஆனால் அந்த இடத்தில் வன்னியர் சங்க கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. இருப்பினும் சம்பந்தப்பட்ட நிலம் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதாக கூறி பல்லாவரம் வட்டாட்சியர்...

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்

By Karthik Yash
10 hours ago

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநராக இருந்தவர் சத்யபால் மாலிக்(79). இவர் கோவா, பீகார், மேகாலயா மற்றும் ஒடிசாவின் ஆளுநர் பதவிகளையும் வகித்தவர். இவர் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக டெல்லி ராம் மனோஹர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர் நேற்று காலமானார். ஆளுநர் பதவியில்...

ஜார்க்கண்டில் கார்டு இல்லாததே சரக்கு ரயில் தடம் புரள காரணம்

By Karthik Yash
10 hours ago

புதுடெல்லி: ஜார்க்கண்டின் கோடர்மா மற்றும் கிரிதி இடையே முழுமையாக சரக்குகள் ஏற்றப்பட்ட சரக்கு ரயில் கடந்த 31ம் தேதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில் சரக்கு ரயிலில் பாதுகாவலர்கள் பணியில் இல்லாததே விபத்துக்கு காரணம் என்று அகில இந்திய ரயில்வே கார்டு கவுன்சில் குற்றம்சாட்டியுள்ளது. சரக்கு ரயிலின் பணியாளர்களுக்கு உதவுவதற்கோ அல்லது வழிநடத்தவோ மற்றும் சரக்கு...

வங்கி கடன் முறைகேடு விவகாரம் அனில் அம்பானியிடம் 10 மணிநேரம் விசாரணை

By Karthik Yash
10 hours ago

புதுடெல்லி: பிரபல தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் கடந்த 2017 முதல் 2019 வரை யெஸ் வங்கியில் ரூ.3,000 கோடி வரை கடன் பெற்று, அதை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தின....