வர்கா இணைப்பு தொழிற்சாலையை மூடக்கூடாது: தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
81 நிரந்தர தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளனர், இது தொழிலாளர் விரோதக் கொள்கையாகும். தொழிற்சாலையை மூடும் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த தொழிற்சாலையில் புல்டோசர்களுக்குத் தேவையான பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதன் காரணமாக, நிறுவனம் லாபகரமாக இயங்குகிறது, ஆனால் தொழிலாளர்களுக்கு எந்த வசதிகளும் வழங்கப்படவில்லை. இது குறித்து பலமுறை கோரிக்கைகள் விடுத்தும், உரிமையாளர் தொழிலாளர்களின் நலன்களை பற்றி கவலைப்படவில்லை.
பல கூட்டங்கள் நடத்தியும், எந்த பலனும் இல்லை. மாவட்ட கலெக்டர் உடனடியாக உரிமையாளரை அழைத்து, தொழிற்சாலையில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
Advertisement