தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

யூரியா உரம் தட்டுப்பாடு விவசாயிகள் சாலை மறியல்

தாவணகெரே: மாவட்டத்தில், யூரியா உரத் தட்டுப்பாட்டை கண்டித்து, விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாவணகெரே மாவட்டம், ஜகளூர் தாலுகாவில் யூரியா உரப் பற்றாக்குறையை கண்டித்து கர்நாடக மாநில விவசாயிகள் சங்கம் (ஹுச்சவ்வனஹள்ளி மஞ்சுநாத் பிரிவு தலைமையிலான) விவசாயிகள் நகரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Advertisement

அப்போது, அமைப்பின் தாலுகா பிரிவின் பொதுச் செயலாளர் ராஜனஹட்டி ராஜு பேசியதாவது, ‘

தாலுகாவில் நல்ல மழை பெய்துள்ளது, ஆனால் விவசாயிகள் உரம் இல்லாததால் சிரமப்படுகிறார்கள். அதிகாரிகள் விழிப்புடன் இல்லை, தேவையான இருப்புக்களை பராமரிக்காமல் பிரச்னையை ஏற்படுத்துகிறார்கள். உரங்களை உடனடியாகவும் போதுமான அளவும் விநியோகிக்க வேண்டும். இல்லையெனில், வரும் நாட்களில் கடுமையான போராட்டம் நடத்த திட்டமிடப்படும்’ என்றார்.

தகவலறிந்து, தாசில்தார் சையத் கலீம் உல்லா, சம்பவ இடத்துக்கு சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘இது தொடர்பாக துணைப்பிரிவு அதிகாரிகள் தலைமையில் அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அடுத்த ஓரிரு நாட்களில் யூரியா உரம் வழங்கப்படும். தற்போத, மறியலை கைவிட்டு, விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்’ என்றார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement