தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயில் வளாகத்தில் மாட்டு வால் ராஜஸ்தானில் வெடித்தது வன்முறை: கடைகள் அடைப்பு; கல்வீசி தாக்குதல்

பில்வாரா: ராஜஸ்தானில் ஒரு கோயில் வாசலில் மாட்டு வால் கிடந்ததை தொடர்ந்து வன்முறை வெடித்தது. கற்கள் வீசி தாக்குல் நடத்தப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டம் பவானிநகர் பகுதியில் உள்ள ஒரு கோயில் வாசலில் நேற்று முன்தினம் மாட்டு வால் கண்டெடுக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு ஏராளமான பக்தர்கள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்களிடம் அமைதிகாக்கும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். மாலை 5 மணிக்குள் குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் திங்கட்கிழமை போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்து கலைந்தனர்.
Advertisement

நேற்று காலையில் ஏராளமான மக்கள் பவானிநகர் பகுதியில் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். கடைகள் அடைக்கப்பட்டன. இதுபற்றி அறிந்ததும் பா.ஜ எம்பி தாமோதர் அகர்வால் மற்றும் கோயில் உறுப்பினர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். அங்கு கூடும்படி வாட்ஸ்அப் மூலம் செய்தி பரவியதால் அந்த பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அவர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும்படி கோஷம் எழுப்பினர். அப்போது போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. பல இடங்களில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர் வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

Advertisement