தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ரயில்களில் தரமற்ற உணவு விநியோக விவகாரம்; ஓராண்டில் 6,645 புகார்கள்; 1,341 ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம்: ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: ரயில்களில் தரமற்ற உணவு விநியோக விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர், ஓராண்டில் 6,645 புகார்கள்; 1,341 ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.  இந்திய ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பயணிகள் நீண்ட காலமாகப் புகார் அளித்து வரும் நிலையில், இதுகுறித்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. மா.கம்யூ கட்சியைச் சேர்ந்த எம்.பி ஜான் பிரிட்டாஸ், மாநிலங்களவையில் ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் உணவு ஒப்பந்தங்கள் வழங்கப்படும் முறையில் உள்ள வெளிப்படைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினார்.

பயணிகளிடமிருந்து பெறப்பட்ட புகார்கள் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான கடந்த ஐந்து ஆண்டுகளின் விவரங்களையும் அவர் கோரியிருந்தார். இதற்குப் பதிலளித்த ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ‘2024-25ம் நிதியாண்டில் மட்டும் ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பயணிகளிடமிருந்து 6,645 புகார்கள் பெறப்பட்டது. இந்தப் புகார்களின் அடிப்படையில், 1,341 உணவு விநியோக ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,995 புகார்களில் எச்சரிக்கைகளும், 1,547 புகார்களில் தகுந்த அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 2023-24ம் ஆண்டில் 7,026 புகார்களும், 2022-23ம் ஆண்டில் 4,421 புகார்களும் பதிவாகியுள்ளன. கலப்படமான அல்லது சுகாதாரமற்ற உணவு குறித்த புகார்கள் மீது அபராதம், ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது’ என்று அமைச்சர் கூறினார். மேலும் வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களுக்கான உணவு ஒப்பந்தங்கள் குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ‘ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் வெளிப்படையான டெண்டர் முறையிலேயே ஒப்பந்தங்கள் வழங்கப்படுகிறது. அதிக ஏலம் கேட்பவர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்படுகிறது.

இதுதொடர்பான அனைத்து விவரங்களும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. தற்போது, 20 நிறுவனங்களுக்கு ரயில்களில் உணவு வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. உணவின் தரத்தை மேம்படுத்த அங்கீகரிக்கப்பட்ட சமையலறைகளில் இருந்து மட்டுமே உணவு விநியோகம் செய்யப்படுகிறது. என்று அமைச்சர் தனது பதிலில் தெரிவித்தார்.

Related News