தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஸ்ரீ நாகம்மாதேவி கோயிலில் 33வது ஆண்டு பிரம்மோற்சவம்: வரும் 27ம் தேதி தொடங்கி ஆக 5ம் தேதி வரை நடக்கிறது

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ஸ்ரீநாகம்மாதேவி கோயில் 33வது பிரம்ம ரதவுற்சம் வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 3ம் தேதி ஸ்ரீநாகம்மாதேவி பிரம்ம ரதவுற்சவம் நடக்கிறது. பெங்களூரு சிவாஜிநகர், செயின்ட் ஜான்ஸ் வீதியில், அஞ்சல க ம் எதிரில் ஸ்ரீ நாகம்மாதேவி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நாக பஞ்சமி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி 33வது ஆண்டு விழா வரும் 27ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5ம் தேதி வரை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வரும் 27ம் தேதி காலை 7 மணிக்கு கோ பூஜை, கங்கா பூஜை, விஷவக்னே கணபதி பூஜை, சுத்தி புண்ணியாகம், ரக்‌ஷ பந்தனம், மிருதங்க சங்கிரகனம், அங்குரார்பனம், பலிஹரணம் மற்றும் கரக ஊர்வலம் நடக்கிறது.
Advertisement

வரும் 28ம் தேதி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கலச ஸ்தாபனம், நாகசாந்தி ஹோமம், மகாமங்களாரத்தி நடக்கிறது. 29ம் தேதி காலை 9 மணிக்கு நாக பஞ்சமி சண்டி பாராயணம், மாலை 6 மணிக்கு சண்டிகா ஹோமம், மகா மங்களாரத்தி நடக்கிறது. 30ம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பகவதி சேவை நடக்கிறது. 31ம் தேதி காலை ஸ்ரீநாகம்மாதேவிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. ஆகஸ்ட் 1ம் தேதி காலை பொங்கல் வழிப்பாடு, பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

மாலை மா விளக்கு சேவை.ஆகஸ்ட் 2ம் தேதி ஸ்ரீசனிபகவான் மற்றும் ஸ்ரீஆஞ்சநேய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் நடக்கிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்வாக ஆகஸ்ட் 3ம் தேதி ஸ்ரீநாகம்மாதேவி பிரம்ம ரதவுற்சவம் நடக்கிறது. 4ம் தேதி வசந்த உற்சவமும், 5ம் தேதி ஊஞ்சல் சேவை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீநாகம்மாதேவி டெம்பள் பப்லிக் சாரிடபல் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Advertisement

Related News