தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறப்பு தீவிர திருத்தம் முடிந்த பிறகு வௌியிடப்பட்ட பீகார் வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

Advertisement

பாட்னா: பீகாரில் நடப்பாண்டு இறுதியில் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்ட தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வௌியிட்டது. இந்நிலையில் பீகார் வரைவு வாக்காளர் பட்டியலில் தன் பெயர் இல்லை என பீகார் முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய பேரவை எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டி உள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த தேஜஸ்வி யாதவ், அவரது மொபைல் போனில் இபிஐசி எண்ணை தேடியபோது, பதிவுகள் எதுவுமில்லை என தெரிய வந்தது.

இதுகுறித்து தேஜஸ்வி யாதவ் கூறுகையில், “வாக்காளர் பட்டியலில் எனது பெயரே இல்லையென்றால் நான் எப்படி தேர்தலில் போட்டியிட முடியும்?” என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய தேஜஸ்வி யாதவ், “ஒவ்வொரு பேரவை தொகுதியிலும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களும், மொத்தமாக 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. ஆனால், நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள், முகவரி, பூத் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் வௌியிடவில்லை. என் பெயரும் இல்லை” என குற்றம்சாட்டி உள்ளார்.

தேர்தல் ஆணையம் மறுப்பு

தேஜஸ்வி யாதவின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. “தேஜஸ்வி யாதவ் தனது பழைய வாக்காளர் எண்ணை வைத்து தேடியிருப்பார். அதனால் பெயரை கண்டுபிடிக்க முடியவில்லை. புதிதாக தரப்பட்ட வாக்காளர் எண், வரிசை எண்ணில் தேஜஸ்வி யாதவின் பெயர் இடம்பெற்றுள்ளது” என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

Advertisement