தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

4 மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலனில்லை; ஜூசில் விஷம் கலந்து கொடுத்து பாடகி கொலை?.. ஒடிசாவில் சோகம்

Advertisement

புவனேஸ்வர்: பிரபல சம்பல்புரி பாடகி ருக்ஸானா பானோ, புவனேஸ்வரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவருக்கு ஜூசில் விஷம் கலந்து கொடுத்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரபல சம்பல்புரி பாடகி ருக்ஸானா பானோ (27), கடந்த 15 நாட்களுக்கு முன் போலங்கிரில் நடந்த ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு ஜூஸ் வழங்கப்பட்டது. அதனை குடித்த பின்னர் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவர் பவானிபட்னாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு, அவர் போலங்கிரில் உள்ள பீமா போய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார், பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் பர்கரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டும், பாடகி ருக்ஸானா பானோ சிகிச்சை பலனின்றி இறந்தார். ஆனால் அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

இதுகுறித்து ருக்ஸானா பானோவின் சகோதரி ரூபி பானோ கூறுகையில், ‘மேற்கு ஒடிசாவைச் சேர்ந்த பாடகரால், எனது சகோதரி ருக்ஸானா பானோவுக்கு அவ்வப்போது மிரட்டல்கள் வந்தன. ஷூட்டிங்கில் அவருக்கு கொடுக்கப்பட்ட ஜூசில் விஷம் கலந்து கொடுத்திருக்க வாய்ப்புள்ளது. அதனால் 4 மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் என் சகோதரியை காப்பாற்ற முடியவில்லை. அவரது மர்ம சாவு குறித்து போலீசாரும் விசாரித்து வருகின்றனர்’ என்றார். பிரபல சம்பல்புரி பாடகி ருக்ஸானா பானோ மர்மமான முறையில் இறந்த சம்பவம் ஒடிசாவில் சோ கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News